பல்லடம் காவல் நிலையம் எதிரே நிறுத்தப்பட்ட பைக் திருட்டு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

பல்லடம் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள கடையில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம ஆசாமி திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருடிச்சென்ற நபரில் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.



திருப்பூர்: பல்லடம் காவல் நிலையத்திற்கு எதிரில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னிய கவுண்டம்பாளையத்தில் வசித்து வருபவர் ஞான பிரகாஷ். இவர் சின்னிய கவுண்டம்பாளையத்தில் சொந்தமாக மின்சாதன கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது கடையில் பணிபுரியும் ராம்கி என்பவர் இன்று மாலை ஞானபிரகாஷின் இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு பல்லடம் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள மற்றொரு மின்சாதன கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார்.



ராம்கி கடையில் பொருட்களை வாங்கி முடித்ததும் இருசக்கர வாகனம் நிறுத்திய இடத்திற்கு வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது மர்மநபர் ஒருவர், முகத்தில் மாஸ்க் அணிந்தபடி இரண்டு முறை இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

பல்லடம் காவல் நிலையத்திற்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல் நிலையத்தின் எதிரில் கூட வாகனத்தை நிறுத்த பாதுகாப்பு இல்லாத சூழல் பல்லடத்தில் நிலவுவதாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...