உடுமலை அமராவதி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்கான இளஞ்சூடு ஏற்றும் விழா

உடுமலைப்பேட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2023-2024ஆம் ஆண்டு கரும்பு அரவையை தொடங்க பாயிலர்களை இளஞ்சூடு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் சண்முகவேலு உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.


திருப்பூர்: அமராவதி சர்க்கரை ஆலையில் அரவைக்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலை நிறுவப்பட்டு சுமார் 60 ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்நிலையில் 2023-2024ஆம் ஆண்டு கரும்பு அரவைக்கான பாயிலர்களை இளஞ்சூடு ஏற்றும் நிகழ்ச்சி இன்று ஆலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சண்முகவேலு, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன், விவசாயிகள் ஆலை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



அப்போது கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகிகளை சூழ்ந்து கொண்ட விவசாயிகள், இந்த ஆலை திடீரென அரவையின் போது பழுதாகி விடுகிறது. இதனால் கரும்பு அறுவடை செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே அரவை துவங்கியவுடன் ஆலை எந்த தங்கு தடையும் இன்றி இயங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த ஆலை நிர்வாகிகள், 60 ஆண்டுகளுக்கு மேலாக பழைய உபகரணங்களை கொண்டு இந்த ஆலை இயங்கி வருகிறது. எப்பொழுது எது பழுதடையும் என்பது தெரியாமல் பணியாற்றுவதாக தெரிவித்தனர்.

முடிந்தவரை தங்களது முழு ஒத்துழைப்பையும் கொடுத்து இந்த ஆலை நிற்காமல் இயங்க உறுதுணையாக இருப்பதாக விவசாயிகளுக்கு உறுதி அளித்தனர்.

வருகின்ற 21ஆம் தேதி நடப்பு ஆண்டிற்கான கரும்பு அரவை துவங்கும் என அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...