தாராபுரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ஸ்ரீராமனின் பிறந்த நாளான ஸ்ரீ ராம ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 504 கலச பூஜையை பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவர் ஆற்றல் அசோக்குமார் துவக்கி வைத்தார்.
திருப்பூர்: தாராபுரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ஸ்ரீராமனின் பிறந்த நாளான ஸ்ரீ ராம ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ஸ்ரீராமனின் பிறந்த நாளான ஸ்ரீ ராம ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் தலைமை வைத்து கலச பூஜையையும், யாக பூஜையையும் துவக்கி வைத்தார்.
இதில் 504 புனித நீர் பூஜையில் வைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், புனித நீர் கலசத்திற்கு சிறப்பு பூஜைகளை செய்து சீதா-ராமர், ஸ்ரீ லட்சுமணர் ஆகியோரது உற்சவமூர்த்தி சிலைகளுக்கு முன் கலச தீர்த்தங்களை ஊற்றி அபிஷேகம் செய்தனர். மேலும் 1008 மூலிகைகளை கொண்டு அக்னி ஹோமம் நடத்தப்பட்டது.