தாராபுரம் மகா மாரியம்மன் கோவில் திருவிழா - நேர்த்தி கடன் செலுத்திய அமைச்சர் கயல்விழி

தாராபுரத்தில் 150 ஆண்டுகள் பழமையான மகா மாரியம்மன் கோயிலில் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற தீர்த்த குட ஊர்வலத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு தீர்த்த குடம் எடுத்து பக்தர்களுடன் ஊர்வலமாக வந்தார்.



திருப்பூர்: தாராபுரம் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தீர்த்த குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 150 ஆண்டுகள் பழமையான மகா மாரியம்மன் திருக்கோயில் கோவிலின் பங்குனி மாத தீர்த்த திருக்குட திருவிழா ஊர் நாட்டாமை தலைமையில் திமுக நகராட்சி வார்டு உறுப்பினர் புனிதா சக்திவேல் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.



இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பக்தர்களுடன், தானும் தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்.



மலர்களாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்த மகா மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், நகரத் துணைச் செயலாளர் பிலோமினா, வார்டு பொறுப்பாளர் மணிமாறன், சுப்பையன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...