எங்கள் சமூகம் மீது அவதூறு பரப்புகிறார்..! - நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா மீது பண்டார குல நல சங்கம் புகார்!

முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா பண்டார குல சமுதாயத்தினர் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பண்டார குல நல சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு பண்டார குல நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பண்டார சமுதாயத்தை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆ.ராசாவின் இந்த பேச்சு, யூடியூப் தளத்தில் வெளியாகி, எங்களது சமுதாய மக்கள் பிற சமுதாய மக்களிடம் மிகவும் அவமானப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தில் எடுத்துள்ள உறுதி மொழியின் படி இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார்.



எனவே நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது குற்றவியல் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். அதேபோல் யூ டியூபில் தங்கள் சமுதாயம் பற்றி பதிவிடப்பட்ட வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...