உடுமலை தொழிற்பயிற்சி நிலையத்தில் சுகாதார விழிப்புணர்வு முகாம்!

உடுமலை தொழிற்பயிற்சி நிலையத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு வாழ்வியல் நெறி முறைகள் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாமில் தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் வழிகாட்டுதலின் படி உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று உடுமலைப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒரு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



இதில் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ராகவேந்திர சாமி கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு சில வாழ்வியல் நெறி முறைகள் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வை வழங்கினார்.



இதில் வட்ட சட்டப்பணிகள் குழு பட்டியல் வழக்கறிஞர்கள் சத்தியவாணி, தம்பி பிரபாகரன் மற்றும் உடுமலைப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையபயிற்சி ஆசிரியர் ரமேஷ், உடற்பயிற்சி ஆசிரியர் சண்முகம் மற்றும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...