கோவை ரேஸ்கோர்ஸில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்..! - மாநகர போலீசார் உறுதி!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் பொதுமக்களின் குறைகளை கேட்டறியப்பட்டது. அப்போது மக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மற்றும் சாலைகளில் பேரிகாடுகள் அமைக்கப்படும் என மாநகர போலீசார் உறுதி அளித்தனர்.


கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என மாநகர காவல் துறை உறுதி அளித்துள்ளது.

கோவை மாநகரம் முழுவதும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் முக்கியமான வீதிகள், குடியிருப்புகளில் போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்தியதோடு, அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டு நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



அதன்அடிப்படையில் கோவை ரேஸ்கோர்ஸ் ஜி.டி வீதியில் உள்ள குடியிருப்பில் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதி குடியிருப்பு மக்களுடன் கலந்துரையாடினர். அப்போது அங்குள்ள பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.



இந்த நிலையில் அப்பகுதி மக்கள் சார்பாக ரேஸ்கோர்ஸ் ரகுநாத்,போலீசாரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அதில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், பார்க்கிங் பிரச்சனை உள்ளதால் பார்க்கிங் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செல்வோருக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதை அடுத்து பேசிய உதவி ஆணையர் சுரேஷ் குமார் கூறியதாவது, மக்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கண்காணிப்பு கேமராக்கள், பேரிகாடுகள் மூலம் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...