கோவையில் பாஜக சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் -ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

கோவையில் பி.எஸ்.ஜி மருத்துவமனையுடன் பாஜக இணைந்து இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தியது. இதில், வடமதுர, என்.ஜி.ஜி.ஓ., காலனி, துடியலூர், பெரியநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.



கோவை: பாஜக சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம், துடியலூரில் நடைபெற்றது.

கோவை துடியலூர் அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ காலனி கேட் அருகே ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி மருத்துவ பிரிவு பெரியநாயக்கன் பாளையம் கிழக்கு மண்டலம் மற்றும் பி.எஸ்.ஜி.மருத்துவமனை ஆகியோர் இணைந்து இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தியது.



இதில் பொது மருத்துவம், மகளிர் நலம், குழந்தைகல் நலம், தோல் நல சிகிச்சை, எலும்ம்பு மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை, கண் நலம், கண் புரை அறுவை சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சை மற்றும் பல் நலம் குறித்து நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இலவசமாக மருத்துவ ஆலோசனை வழங்கினர்.



இந்த மருத்துவ முகாமில், வடமதுரை, என்.ஜி.ஜி.ஓ காலனி, துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், குருடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் கலந்துக்கொண்டு சிகிச்சை பெற்றனர்.



இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ பிரிவு மாநில செய்லாளர் டாக்டர்.பாபு, மாவட்ட தலைவர் டாகடர். சுரேந்திரன் முன்னிலையில் முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு மண்டல தலைவர் புவனேஸ்வரன், மருத்துவ பிரிவு டாக்டர்.மகேஸ்வரன் மற்றும் பொருளாளர் சண்முகவடிவேல், செயலாளர்கள் உதயகுமார், பிரபாவதி, ஒன்றிய செயலாளர் தன்ராஜ், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் சாய்சரவணகுமார் உட்பட பலர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...