அரசு விழாக்களில் கும்மியாட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்..! - கலைஞர்கள் கோரிக்கை

கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தினை கற்றுக் கொள்வதால் மனமும் உடலும் ஒருசேர கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. கும்மியாட்டக் கலை என்பது போர் பொக்கிஷம். தமிழ்நாடு அரசின் பாரம்பரிய கலைகள் பட்டியலில் கும்மியாட்டம் 70 வது இடத்தில் உள்ளதாக மங்கை வள்ளி கும்மி ஆட்ட குழுவினர் தெரிவித்தனர்.



பல்லடம்: அரசு விழாக்களில் கும்மியாட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கும்மியாட்ட கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் இன்று மங்கை வள்ளி கும்மி ஆட்ட குழுவினரின் 54ஆவது அரங்கேற்ற விழா நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள்,ஆண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் ஒரே சீருடையில் கும்மியடித்து மகிழ்ந்தனர்.



முருகப்பெருமான் வள்ளியை எப்படி மணம் முடித்தார் என்ற கதையினை 30 பாடங்களாக பிரித்து நான்கு மணி நேரம் பாடலாக படித்து அவர்கள் கும்மிடியத்து நடனமாடினர். ஒரே சீருடையில் 300-க்கும் மேற்பட்டோரின் கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தினை கற்றுக் கொள்வதால் மனமும் உடலும் ஒருசேர கட்டுப்பாட்டுடன் இருப்பதாகக் கூறிய கும்மியாட்டக் குழுவினர், கும்மியாட்டக் கலை என்பது போர் பொக்கிஷம் எனவும் தமிழ்நாடு அரசின் பாரம்பரிய கலைகள் பட்டியலில் கும்மியாட்டம் 70 வது இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்ற அரசு விழாக்களில் நடைபெறும் அணிவகுப்புகளில் கும்மி ஆட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கும்மியாட்ட குழுவினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...