உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணறு பகுதியை சேர்ந்த பஞ்சலிங்கம் என்பவரின் வீட்டில் நுழைந்து, 6 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து உடுமலை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூலாங்கிணறு பகுதியைச் சேர்ந்த அய்யாவு என்பவரது மகன் பஞ்சலிங்கம் (வயது 58). மில் தொழிலாளி. இவருடைய மனைவி பாலக்காட்டிலுள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் பஞ்சலிங்கம் தனியாக வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று இரவுப் பணிக்காக இரவு 9.30 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு மில்லுக்கு சென்றார்.

பின்னர் வேலை முடிந்து மறுநாள் காலை 6 மணி அளவில் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் பக்க கதவில் இருந்த தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. இதனால் பதற்றமடைந்த பஞ்சலிங்கம், உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அறையில் சிதறிக்கிடந்தன.

மேலும், பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்த பஞ்சலிங்கம், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் சம்பவம் குறித்து பஞ்சலிங்கம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த உடுமலை போலீசார் மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர். மேலும் அந்த பகுதிக்கு அருகில் உள்ள கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் புதிய நபர்கள் நடமாட்டம் ஆகியவை குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...