உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட விவல்ல கொண்டாபுரத்தில் குளங்களில் அனுமதியின்றி வண்டல் மண் எடுப்பதாகவும், தடுக்க சென்ற அதிகாரிகளையும் வண்டல் மண் எடுப்பவர்கள் மிரட்டுவதாகவும், பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
திருப்பூர்: உடுமலை அருகே அனுமதியின்றி வண்டல் மண் எடுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விவல்ல கொண்டாபுரம் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில், விவசாயிகள் போர்வையில் திமுக பிரமுகர்கள் மற்றும் ஜேசிபி டிராக்டர் உரிமையாளர்கள் முறைகேடாக ஆணை பெற்று கடந்த சில தினங்களாக வண்டல் மண் எடுத்து ஒரு இடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் விவசாயிகள் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்தில் வட்டாட்சியர் கண்ணாமணி ஆய்வு செய்து முறைகேடாக வண்டல் மண் எடுத்தவர்களை எச்சரித்தார்.

மேலும் தொடர்ந்து வண்டல் மண் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில், இன்று வண்டல் மண் அள்ளக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தாலும், காலையிலிருந்து வண்டல் முறைகேடாக டிராக்டர் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.
இது குறித்து விவசாயிகள் தரப்பில் கோட்டாட்சியர் ஜஸ்வந்கண்ணணுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கோட்டாட்சியர் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வண்டல் மண் எடுப்பது நிறுத்துங்கள் எனக் கூறியுள்ளார்.
ஆனால் வண்டல் மண் எடுப்பவர்கள் அமைச்சர், மாவட்டச் செயலாளரிடம் சொல்லி விட்டு எடுக்கிறோம், எங்களுக்கு அனுமதி வழங்கி விட்டார்கள் என வருவாய்த்துறையினரை மிரட்டும் தொணியில் பேசிவிட்டு தொடர்ந்து மண் எடுத்து வருகின்றனர்.
ஆகையால் மாவட்ட ஆட்சியர் இவ்விஷயத்தில் தலையிட்டு உடனே வண்டல் மண் எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தவறும் பட்சத்தில் விவசாயிகள் ஒன்று திரட்டி நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விவல்ல கொண்டாபுரம் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில், விவசாயிகள் போர்வையில் திமுக பிரமுகர்கள் மற்றும் ஜேசிபி டிராக்டர் உரிமையாளர்கள் முறைகேடாக ஆணை பெற்று கடந்த சில தினங்களாக வண்டல் மண் எடுத்து ஒரு இடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் விவசாயிகள் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்தில் வட்டாட்சியர் கண்ணாமணி ஆய்வு செய்து முறைகேடாக வண்டல் மண் எடுத்தவர்களை எச்சரித்தார்.
மேலும் தொடர்ந்து வண்டல் மண் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில், இன்று வண்டல் மண் அள்ளக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தாலும், காலையிலிருந்து வண்டல் முறைகேடாக டிராக்டர் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.
இது குறித்து விவசாயிகள் தரப்பில் கோட்டாட்சியர் ஜஸ்வந்கண்ணணுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கோட்டாட்சியர் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வண்டல் மண் எடுப்பது நிறுத்துங்கள் எனக் கூறியுள்ளார்.
ஆனால் வண்டல் மண் எடுப்பவர்கள் அமைச்சர், மாவட்டச் செயலாளரிடம் சொல்லி விட்டு எடுக்கிறோம், எங்களுக்கு அனுமதி வழங்கி விட்டார்கள் என வருவாய்த்துறையினரை மிரட்டும் தொணியில் பேசிவிட்டு தொடர்ந்து மண் எடுத்து வருகின்றனர்.
ஆகையால் மாவட்ட ஆட்சியர் இவ்விஷயத்தில் தலையிட்டு உடனே வண்டல் மண் எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தவறும் பட்சத்தில் விவசாயிகள் ஒன்று திரட்டி நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.