உடுமலை அருகே வண்டல் மண் கொள்ளை - பொதுமக்கள் குற்றச்சாட்டு!

உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட விவல்ல கொண்டாபுரத்தில் குளங்களில் அனுமதியின்றி வண்டல் மண் எடுப்பதாகவும், தடுக்க சென்ற அதிகாரிகளையும் வண்டல் மண் எடுப்பவர்கள் மிரட்டுவதாகவும், பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே அனுமதியின்றி வண்டல் மண் எடுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விவல்ல கொண்டாபுரம் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.



இந்த நிலையில், விவசாயிகள் போர்வையில் திமுக பிரமுகர்கள் மற்றும் ஜேசிபி டிராக்டர் உரிமையாளர்கள் முறைகேடாக ஆணை பெற்று கடந்த சில தினங்களாக வண்டல் மண் எடுத்து ஒரு இடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் விவசாயிகள் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்தில் வட்டாட்சியர் கண்ணாமணி ஆய்வு செய்து முறைகேடாக வண்டல் மண் எடுத்தவர்களை எச்சரித்தார்.



மேலும் தொடர்ந்து வண்டல் மண் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில், இன்று வண்டல் மண் அள்ளக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தாலும், காலையிலிருந்து வண்டல் முறைகேடாக டிராக்டர் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

இது குறித்து விவசாயிகள் தரப்பில் கோட்டாட்சியர் ஜஸ்வந்கண்ணணுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கோட்டாட்சியர் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வண்டல் மண் எடுப்பது நிறுத்துங்கள் எனக் கூறியுள்ளார்.

ஆனால் வண்டல் மண் எடுப்பவர்கள் அமைச்சர், மாவட்டச் செயலாளரிடம் சொல்லி விட்டு எடுக்கிறோம், எங்களுக்கு அனுமதி வழங்கி விட்டார்கள் என வருவாய்த்துறையினரை மிரட்டும் தொணியில் பேசிவிட்டு தொடர்ந்து மண் எடுத்து வருகின்றனர்.

ஆகையால் மாவட்ட ஆட்சியர் இவ்விஷயத்தில் தலையிட்டு உடனே வண்டல் மண் எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தவறும் பட்சத்தில் விவசாயிகள் ஒன்று திரட்டி நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...