கோவை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து - அரசு பள்ளி தலைமை ஆசிரியை பலி!

கோவை பெட்டதாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சத்தியவேணி(55) கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் சென்ற போது அவரது பைக் மீது வேன் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


கோவை: கோவை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வஞ்சிமாநகரை சேர்ந்த முனுசாமி என்பவரின் மனைவி சத்தியவேணி(55). இவர் பெட்டதாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று மாலை சொந்த வேலை காரணமாக நரசிம்மநாயக்கன்பாளையத்திற்கு சென்றுவிட்டு, ஸ்கூட்டரில் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.



அப்போது, தெற்குபாளையம் பிரிவு அருகே வந்த போது பின்னால் வேகமாக வந்த வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்த டீ கடையில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராவில் விபத்து குறித்த காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதில் சத்தியவேணி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த வேன் அவர் மீது மோதியதில், தூக்கிவீசப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளது.

மேலும் விபத்தை ஏற்படுத்திய வேன், தலைமை ஆசிரியை மீது மோதுவதற்கு முன்பு அவருக்கு முன்னால் இருந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீதும் மோதியுள்ளது. அதில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...