வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் வடமாநில சிறுவன் காயம் - பரபரப்பு!

கோவை வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுவனை சிறுத்தை தாக்கியதில் கையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கோவை: வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் வடமாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சங்கிலிரோடு எஸ்டேட் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். சங்கிலி ரோடு எஸ்டேட் பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் வட மாநில தொழிலாளியான பாப்பையா என்பவரது மகன் ஆகாஷ்(5) இன்று காலையில் வீட்டின் முன்பு தேயிலை தோட்டம் அருகில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் சிறுவனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் சிறுத்தையை விரட்டி விட்டு சிறுவனை காப்பாற்றினார்.



இதனையடுத்து, சிறுவனை எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதல் உதவி சிகிச்சை அளித்து பின் மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...