தாராபுரம் நகராட்சியில் சிறப்பு துப்புரவு பணி - பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள்!

தாராபுரம் நகராட்சி சார்பில் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள ‘என் குப்பை என் பொறுப்பு’ திட்டத்தின் கீழ் சிறப்பு துப்புரவு பணி மேற்கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சியில் பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த "என் குப்பை என் பொறுப்பு" என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி மற்றும் நகர் மன்றம் இணைந்து “என் குப்பை என் பொறுப்பு” என்ற திட்டம் குறித்து நகர பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தாராபுரம் நகராட்சி என்.சி.பி ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில், நகராட்சி ஆணையாளர் ராமர் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தலைமையேற்று இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் 25க்கும் மேற்பட்டோரும், நகர் மன்ற தலைவர் நகராட்சி ஆணையர் ஆகியோரும் ஒரே இடத்தில் கூடி நகராட்சி பள்ளியை அடுத்த உழவர் சந்தை செல்லும் சாலையில் அப்பகுதி வியாபாரிகளாலும் பொதுமக்களாலும் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை கூலங்கள் அனைத்தையும் மாஸ் கிளீனிங் முறையில் முற்றிலுமாக அகற்றி தூய்மைப்படுத்தினர்.



தொடர்ந்து “என் குப்பை என் பொறுப்பு” என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை நகர மன்ற தலைவர், குடியிருப்பு வாசிகளுக்கும் அவ்வழியாக சென்ற பொது மக்களுக்கும் வழங்கினார்.

பின்னர், உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தான் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.



இதனால் உங்கள் பகுதியில் நோய் பரவலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பதுடன் இப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களுக்கும் நோய் பரவலை தடுக்க முடியும் என்பதை வலியுறுத்தி உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற துணை தலைவர் ரவிச்சந்திரன் வார்டு கவுன்சிலர்கள் சீனிவாசன், முபாரக் அலி, மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அண்ணா நகர் பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...