‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ கண்காட்சியை நேரில் கண்டு ரசித்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்!

கோவை வ.உ.சி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியினை நேரில் பார்வையிட்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், முதல்வரை சிலையாக வைக்கப்பட்டது தனக்கு பிடித்திருந்ததாக தெரிவித்தார்.



கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேரில் பார்வையிட்டார்.



கோவை வ.உ.சி பூங்காவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பான, “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியினை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பார்வையிட்டார்.



இதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,



“எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்று இங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து புகைப்படமும் நன்றாக உள்ளது. கட்சியில் கடைசி தொண்டனாக இருந்து ஆரம்பித்து தலைமைக்கு வந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் இந்த கண்காட்சி முதலில் நடைபெற்றது. தற்போது, செந்தில் பாலாஜி மூலம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது. நான் இங்கு வந்து அந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளேன் முதல்வர் அவர் கடந்து வந்த பாதை புகைப்படம் கண்காட்சியை கண்டிப்பாக அனைவரும் பாருங்கள்.

இதனையடுத்து அவரிடம் உங்களுக்கு பிடித்த புகைப்படம் என கேட்கப்பட்ட கேள்விக்கு, முதல்வரை சிலையாக வைக்கப்பட்டது எனக்கு பிடித்தது என பதிலளித்தார்.

முதல்வர் தனது இளம் வயதில் கிரிக்கெட் ஆடுவது 23 வயது 25 வயது பயண புகைப்படம் என்னுடைய தலைமுறைக்கு அது தெரியாது. முதல்வரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு நல்ல ஒரு கண்காட்சி அனைவரும் வந்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...