பல்லடம் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை கழிவுகள் குட்டையில் வெளியேற்றம் - மண்ணை கொட்டி மூட வந்த டிராக்டர்கள் பறிமுதல்!

பல்லடம் அருகே பாச்சா கவுண்டம்பாளையத்தில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஆலைக்கழிவுகளை குட்டையில் திறந்து விட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, மண்ணைக் கொட்டி மூட வந்த 2 டிராக்டர்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அடுத்த பாச்சா கவுண்டம்பாளையத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து, கழிவுகளை குட்டையில் திறந்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாச்சாகவுண்டம் பாளையத்தில் ஆலை கழிவுகள் சுத்திகரிக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது.



15க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அருகில் உள்ள குட்டையில் கலப்பதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் இன்று அதிகப்படியான கழிவு நீர் வெளியேற்றப்பட்டதை மறைக்க சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து இரண்டு டிராக்டர்கள் மூலம் மண்ணைக் கொண்டு வந்து கொட்டி உள்ளனர். இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் இரண்டு டிராக்டர்களையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையிலிருந்து குட்டையில் கலப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதை மறைப்பதற்காக மண்ணை கொட்ட வந்த இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது, தொடர்ச்சியாக ஆலை கழிவுகளை குட்டையில் கலப்பதால் ஆடு, மாடுகள் இந்த நீரை குடிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. கால்நடைகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...