சர்க்கரை நோய் பாதித்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் - கோவை சவுத் ரோட்டரி கிளப் நிதியுதவி

தமிழகத்தில் சர்க்கரை நோயால் அவதிப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சவுத் வழங்கியது. இந்தக் காசோலை இதயங்கள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.


கோவை: தமிழகம் முழுவதும்‌ சர்க்கரை நோயால் அவதிப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இன்சுலின் மருந்து மற்றும் அதற்கான உபகரணங்கள், இதயங்கள் அறக்கட்டளை சார்பில் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏழை, எளிய குழந்தைகளை சர்க்கரை நோயிலிருந்து மீட்டெடுக்கும் வகையிலான நிகழ்ச்சி ரோட்டரி க்ளப் ஆப் கோயம்புத்தூர் சவுத் சார்பில் கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள கோவை மருத்துவ கல்லூரி அருகே நடைபெற்றது.



அதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வை அளிக்கும் வகையில் இன்சுலின் மருந்துகளுக்கான 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இதயங்கள் அறக்கட்டளைக்கு ரோட்டரி க்ளப் ஆப் கோயம்புத்தூர் சவுத் நிர்வாகிகள் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இதயங்கள்‌ அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன், ரோட்டரி மூலம் மேற்கொள்ளப்பட்ட இவ்வுதவிக்கு நன்றி. இன்சுலின் தேவைப்படும் 70 குழந்தைகளுக்கு அடுத்த இரண்டு மாதத்தில் ரோட்டரி சார்பில் உதவி அளிக்கப்பட உள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கவர்னர் ராஜ்மோகன் நாயர் ரோட்டரி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...