கிணத்துக்கடவு அருகே பாறைகற்களை ஏற்றிவந்த 2 லாரிகள் சிறைபிடிப்பு!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பாறைக்கற்களை கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்ற 2 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது. கல்குவாரிகளிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் சென்ற 2 லாரிகளுக்கும் ரூ.96 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.



கோவை: கிணத்துக்கடவு அருகே கேரளாவுக்கு பாறைக்கற்களை ஏற்றிச் சென்ற 2 லாரிகள் சிறைபிடித்து, அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்குவாரிகளிலிருந்து அளவுக்கு அதிகமாக பாறைகற்களை ஏற்றி, கேரளா மாநிலத்திற்கு லாரிகள் செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்தனர்.

இதுகுறித்து, கனிமவளத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.



இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள 10 நெம்பர். முத்தூர், வன்னி குமாரசாமி கோவில் அருகில் அதிகபாரம் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சிறைபிடித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், அளவுக்கு அதிகமாக பாறை கற்களை ஏற்றி சென்ற 2 லாரிகளுக்கும் 96 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.

அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்களும், விவசாயிகளும் சிறைபிடித்த சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...