அனைத்து மாவட்டங்களிலும் அரசு நர்சிங் பயிற்சி மையம் தொடங்கப்படும்..! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமே அரசு நர்சிங் பயிற்சி மையங்கள் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் அரசு நர்சிங் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்று கோவையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை அருகே புதிதாக தொடங்கப்பட்ட தனியார் நர்சிங் கல்லூரியை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் ஏ.ஜே.கே.கல்லூரி குழும வளாகத்தில் புதிதாக துவங்கப்பட்ட ஏ.ஜே.கே.நர்சிங் கல்லூரி துவக்க விழா, கல்விக் குழுமங்களின் தலைவர் அஜீத்குமார் லால் மோகன் தலைமையில் நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு புதிதாக துவங்கப்பட்ட நர்சிங் கல்லூரியை திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக முதல்வர் துவக்கி வைத்த இந்த கல்லூரியின் புதிய அங்கமான நர்சிங் கல்லூரியை துவக்கி வைப்பதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும், நர்சிங் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கூறினார்.

ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில், தமிழகத்திலிருந்து வரும் நர்சிங் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதற்கு காரணம் அன்னை தெரசாவின் தாயுள்ளம் மற்றும் சேவை மனப்பான்மையோடு தமிழக நர்சிங் கல்லூரிகள் மனிதாபிமான முன்னுரிமையில் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

தற்போது தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமே அரசு நர்சிங் பயிற்சி மையங்கள் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், விரைவில் அரசு நர்சிங் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது, இது குறித்து ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட சுகாதார துறை இயக்குனர் டாக்டர் அருணா, அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா, மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், மருத்துவர் கந்தசாமி, ஏ.ஜே.கே.கல்லூரி முதல்வர் பிருந்தா, ஊராட்சி துணை தலைவர் செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...