உடுமலையில் பெய்த கோடை மழையால் நனைந்த நெற்பயிர்கள் - கொள்முதல் காலத்தை நீடிக்க கோரிக்கை!

உடுமலை பகுதியில் சுமார் 800 ஏக்கரில் 2ஆம் போக நெல் பயிரிட்டுள்ளனர். நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் திடீர் கோடை மழை பெய்தது. எனவே, கொள்முதல் காலத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை பகுதியில் பெய்த கோடை மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நனைந்தன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள அமராவதி பாசனப்பகுதியில் விவசாயிகள் சுமார் 800 ஏக்கரில் 2ஆம் போக நெல் பயிரிட்டுள்ளனர். நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் திடீர் கோடை மழை பெய்தது.



இதனால் நெற்பயிர்கள் ஈரமாகின. மேலும், அறுவடைக்காக வயல்களுக்குள் இயந்திரங்களை ஓட்டிச் செல்ல முடியாத அளவுக்கு சகதியாகி உள்ளது. குறிப்பாக, குமரலிங்கம், சாமராயபட்டி, கொழுமம், கண்ணாடிபுத்தூர், நீலம்பூர், பாப்பான்கு ளம், ருத்ராபாளையம், சாளரப்பட்டி, மடத்துக்குளம், நீலம்பூர் உள்ளிட்ட இடங்களில் நெற்பயிர்கள் ஈரமானதால் அறுவடைக்கு காலதாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "தற்போது பெய்த கோடை மழையால் நெற்பயிர்கள் சாயும் அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

அதேநேரம், பயிர்கள் நனைந்து நிலம் சகதியாக மாறியுள்ளது. உள்ளே சென்று ஆறு வடை செய்ய 15 நாட்கள் ஆகிவிடும்.

அதன்பிறகு காயவைத்த பிறகே கொள்முதல் மையத்துக்கு கொண்டு செல்ல முடியும். எனவே, நெல் கொள்முதலை முடித்து விடாமல், கால நீட்டிப்பு செய்ய வேண்டும்" என்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...