வால்பாறை - பொள்ளாச்சி சாலையை மறித்த யானைகளால் பரபரப்பு

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் உள்ள புதுதோட்டம் எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியிலிருந்து மூன்று காட்டு யானைகள் தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்றது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் நின்ற யானைகளை பார்த்து பயந்து வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் மூன்று காட்டு யானைகள் சாலையை மறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் பயந்து வாகனங்களை நடுவழியிலேயே நிறுத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி தேயிலை தோட்டங்களிலும், வனப்பகுதி சாலை ஓரங்களிலும் சுற்றி வருகிறது.



தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. மேலும் வனப்பகுதிக்குள் தண்ணீர் இல்லாததால் வனவிலங்குகள், தண்ணீர் தேடி அங்கும் இங்கும் அலைந்து திரிகிறது.

இந்நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள புது தோட்டம் எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியிலிருந்து மூன்று காட்டு யானைகள் தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்றது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் நின்ற யானைகளை பார்த்து பயந்து வாகனங்களை நிறுத்தினர்.



சிறிது நேரம் கழித்து காட்டு யானைகள் சாலையை கடந்து தண்ணீர் இருக்கும் இடத்திற்கு சென்று தண்ணீர் குடித்து நின்றது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பின்பு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...