இடுக்கி மாவட்டத்தில் 10 பேரை கொன்று வீடுகளை சேதப்படுத்தி வந்த அரிக்கொம்பன் யானையை பரம்பிக்குளம் பகுதியில்விட எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மலைவாழ் மக்கள் மாவட்ட வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சின்னக்கானால் சாந்தன் பாறை ஆகிய பகுதிகளில் 16 ரேஷன் கடைகள் மற்றும் 60.க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியும் மற்றும் 10 பேரை கொன்ற யானையைப் பிடித்து பரம்பிக்குளம் பகுதியில் விடுவதற்கான 5 பேர் கொண்ட நிபுணர் குழு அறிக்கை ஒன்றை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

இதைக் கண்டிக்கும் விதமாக பரம்பிக்குளம் மலைவாழ் மக்கள் 100.க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களில் 600 குடும்பங்கள் 2500 மக்கள் வசித்து வருகின்றனர்.

அரிகொம்பனை பிடித்து இப்பகுதியில் விட்டால் இங்குள்ள விவசாயிகளுக்கும் மற்றும் இப்பகுதி உள்ள பொதுமக்களும் அச்சுறுத்தலாக இருக்கும் எனவும், இப்பகுதியில் மக்கள் சிறிய அளவில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அதை இடிப்பதோடு பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு அச்சத்தோடு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மக்கள் தெரிவித்தனர்.

எனவே, அரிகொம்பன் யானையை பரம்பிக்குளம் பகுதிக்கு கொண்டு செல்வது என்ற நிபுணர் குழுவின் முடிவை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட வனத்துறை வன அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கோரிக்கைவிடுத்தனர்.

மலைவாழ் மக்கள் ஒன்று கூடி மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதைக் கண்டிக்கும் விதமாக பரம்பிக்குளம் மலைவாழ் மக்கள் 100.க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களில் 600 குடும்பங்கள் 2500 மக்கள் வசித்து வருகின்றனர்.
அரிகொம்பனை பிடித்து இப்பகுதியில் விட்டால் இங்குள்ள விவசாயிகளுக்கும் மற்றும் இப்பகுதி உள்ள பொதுமக்களும் அச்சுறுத்தலாக இருக்கும் எனவும், இப்பகுதியில் மக்கள் சிறிய அளவில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அதை இடிப்பதோடு பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு அச்சத்தோடு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மக்கள் தெரிவித்தனர்.
எனவே, அரிகொம்பன் யானையை பரம்பிக்குளம் பகுதிக்கு கொண்டு செல்வது என்ற நிபுணர் குழுவின் முடிவை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட வனத்துறை வன அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கோரிக்கைவிடுத்தனர்.
மலைவாழ் மக்கள் ஒன்று கூடி மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.