கோவையில் குற்றச் செயல்களைத் தடுக்க நடவடிக்கை - கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தம்

கோவை திருமலைநாயக்கன்பாளையத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட 11 கண்காணிப்பு கேமிராக்களை பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் பங்களிப்புடன் பெரியநாயக்கன்பாளையம் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தாமோதரன் ஆகியோர் பல்வேறு முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்களை அமைத்து வருகின்றனர்.



அதன் இயக்கங்கள் அனைத்து பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட திருமலை நாயக்கன்பாளையத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் ஜோதிபுரத்தைச் சேர்ந்த சுபா பிளாஸ்டிக் என்ற தனியார் நிறுவனம் 1.5 லட்சம் செலவில் 11 கண்காணிப்பு கேமிராக்களை அமைத்துக் கொடுத்துள்ளனர்.



இதன் தொடக்க விழாவில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் கலந்து கொண்டு 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்.



அப்போது, கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்துக் கொடுத்த சுபா பிளாஸ்டிக்ஸ் நிறுவன உரிமையாளர் பாஸ்கரன் மற்றும் அதற்கு உதவியவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



நிகழ்ச்சியில் பேசிய துணை காவல் கண்காணிப்பாளர், குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல லட்சம் மதிப்பில் வீடுகளை கட்டுவோர் சில ஆயிரம் மதிப்பில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...