கோவை ஜி.என்.மில்ஸ் அருகே கேரள லாட்டரி விற்பனை - இருவர் கைது!

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வந்த அலெக்சாண்டர் மற்றும் கணேசன் ஆகியோரை துடியலூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5420 பணம் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் ஜி.என்.மில்ஸ் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கோவை துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருவதாக துடியலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் துடியலூர் காவல் உதவி ஆவாளர் பழனியாண்டி தலைமையிலான காவலர்கள் ஜி.என்.மில்ஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிக்கொண்டு இருந்த சுப்பிரமணியம் பாளையத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் மற்றும் கணேசன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த துடியலூர் போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.5,420 பணம் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...