கோவை அருகே பைக் மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து - தந்தை, மகன் பலியான சோகம்!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே தனியார் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற கல்லூரி பேருந்து, சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில், தந்தை, மகன் பலியான சம்பவம் குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் தந்தையும் மகனும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருமத்தம்பட்டி அடுத்த நார்த்தங்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு. இவர் தனது மகன் நந்தகுமாருடன் அதிகாலை கோவிலுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.



இருசக்கர வாகனம் கிட்டாம்பாளையம் நான்கு ரோடு அருகே சென்றபோது, பொள்ளாச்சியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் செல்வத்தை கைது செய்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் பொள்ளாச்சியை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் மாணவர்களை, சத்தியமங்கலம் தனியார் கல்லூரியில் நடைபெறும் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்து கொள்ள வைப்பதற்காக கல்லூரி பேருந்தில் அழைத்து சென்ற போது விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையும், மகனும் இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடக்கும் போது பேருந்து மோதும் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...