உடுமலை அருகே ஆட்டோ - லாரி நேருக்கு நேர் மோதல் : 4 பேர் படுகாயம்!

பொள்ளாச்சியை சேர்ந்த அண்ணாதுரை (52) என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் ஒட்டன்சத்திரத்திற்கு ஆட்டோவில் சென்று திரும்பிய போது, உடுமலை அருகே ஆட்டோவும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் இருந்த ஓட்டுனர் உள்பட 4 பேரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே டேங்கர் லாரி மீது ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொள்ளாச்சி அருகேயுள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் பூமாலை. இவரது மகன் அண்ணாதுரை (52). இவர் தனது சரஸ்வதி (50) மற்றும் மகள் நந்தினி (26) ஆகியோருடன் தனது பேரனுக்கு பெயர் வைக்கும் நிகழ்விற்காக ஒட்டன்சத்திரம் நோக்கி ஆட்டோவில் சென்றுள்ளனர்.

இந்நிலையில், விழா முடிந்து மூவரும் ஆட்டோவில் பொள்ளாச்சி நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். ஆட்டோவை பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த குருசாமி (50) என்பவர் ஓட்டி வந்தார்.

இதனிடையே ஆட்டோ பெதப்பம்பட்டி அடுத்த லிங்கம்மநாயக்கன்புதூர் பிரிவு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக பொள்ளாச்சியில் இருந்து குடிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்த ஓட்டுனர் உட்பட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...