கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் - கால அட்டவணை வெளியீடு

கோவை- சென்னை இடையேயான இயக்கப்பட உள்ள அதிகவேக வந்தே பாரத் ரயில் சேவைக்கான கால அட்டவணையை தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 9ம் தேதி முதல் இந்த ரயிலானது மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படவுள்ளது.


தமிழகத்தின் முதல் அதிவேக ரயில் சேவையான வந்தேபாரத் ரயிலை வரும் 8ம் தேதி பிரதமர் மோடி சென்னையில் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். சென்னை-கோவை இடையே இயக்கப்படும் இந்த ரயிலுக்கான கால அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த வந்தே பாரத் ரயிலானது கோவை- சென்னை இடையே புதன்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்படவுள்ளது. கோவையிலிருந்து வண்டி எண் 20644 காலை 6 மணிக்கு புறப்பட்டு, நண்பகல் 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும்.



கோவையிலிருந்து புறப்படும் இந்த ரயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதேபோல், மறுமார்க்கத்தில், வண்டி எண் 20643 சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்கள் வழியாக கோவையை இரவு 8.15 மணிக்கு அடையும்.

பிரதமர் மோடி இந்த ரயில் சேவையை ஏப்ரல் 8ம்தேதி தொடங்கிவைக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 9ம் தேதி முதல் இந்த கால அட்டவணைப்படி வந்தே பாரத் ரயில் சேவை இருக்கும் என தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...