பொள்ளாச்சி அருகே உள்ள குப்பிச்சிபுதூர் கிராமதைச் சேர்ந்த சாவுத்ரி ராஜ் எனும் இளைஞர், மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த டனியலா எனும் பெண்ணை தமிழ்முறைப்படி திருமணம் செய்துகொண்டது, அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குப்பிச்சிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தண்டபாணி கிருஷ்ணவேணி தம்பதி.
டீக்கடைக்காரரான தண்டபாணியின் மகன் சாவுத்ரி ராஜ் கோவையில் படிப்பை முடித்துவிட்டு மெக்சிகோவில் வேலை பார்த்து வந்தார். சாவுத்திரி ராஜ் அங்கு தன்னுடன் மெக்சிகோவில் வேலை பார்க்கும் டனியலா என்ற பெண்ணை காதலித்துள்ளார்.
இரு வீட்டாரின் சம்மதத்தையும் பெற்று தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள சாவுத்ரி ராஜ் விரும்பி உள்ளார்.
இதனை அடுத்த, சாவுத்ரிராஜன் குடும்ப முறைப்படி ஆனைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மெக்சிகோ நாட்டு மணப்பெண்ணிற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞருக்கும் விமர்சையாக திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மணப்பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மெக்சிகோ நாட்டில் இருந்து பொள்ளாச்சி வந்துள்ளனர்.
திருமணம் முடிந்த நிலையில் இரு விட்டாரும் மகிழ்ச்சியுடன் நடனமாடி அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினர்.