தாராபுரம் உழவர் சந்தையில் தரமற்ற தக்காளி விற்பனை - பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தாராபுரம் உழவர் சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கிலோ ரூ.9க்கு விற்பனை செய்யப்படும் தக்காளியை விவசாயிகள், சில்லறையாகக் கொடுக்காமல் பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்படுவதால், தரமற்ற தக்காளிகளை விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் உழவர் சந்தையில் தரமற்ற தக்காளி விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்குச் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தக்காளிகளை பெட்டியில் அடுக்கி வைத்து விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.



அதன்படி உழவர் சந்தையில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ஒன்பது ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகள் தக்காளியை சில்லறையாக விற்பனை செய்யாமல், 15 கிலோ எடைக் கொண்ட பெட்டிகளை வைத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

இதனால் தரமற்ற தக்காளியை மட்டுமே விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தரமான தக்காளியை வாங்க உழவர் சந்தைக்கு வந்தால், அங்கும் தரமற்ற தக்காளிகளே விற்பனை செய்வதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மொத்தமாக காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுத்து, சில்லறையில் வாங்கும் பொது மக்களுக்கு அனைத்து காய்கறிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...