பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் திருவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, சிவப்பு நிற பட்டுடுத்தி வெள்ளி தேரில் உலாவவந்த அம்மனை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.



கோவை: பொள்ளாச்சி வாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் தேர் திருவிழா, கடந்த பங்குனி மாதம் முதல் செவ்வாய் கிழமை நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் பூவோடு எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வந்தனர். நேற்று காலை மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர்.



திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாரியம்மன் வெள்ளி தேரில் திருவீதி உலா நேற்றிரவு நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் சிவப்பு நிற பட்டுடுத்தி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



இதனை ஆயிரக்கணக்கான மக்கள் பக்தியுடன் தரிசனம் செய்தனர். அதர்மத்தை நீக்கி தர்மத்தை நிலை நாட்ட மாரியம்மன் சிவப்பு நிற பட்டுடுத்தி உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சுபிட்சத்தை அருளவும், அம்மன் கருணையால் மக்கள் எல்லா வளங்களும் பெறவேண்டியும் இந்த திருவீதி உலா நடைபெறுவதாக அர்ச்சகர் தியாகராஜன் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...