உடுமலை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்கும்படி பயணிகள் வலியுறுத்தல்

உடுமலை வழியாக கோவை - மதுரை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை ஆகிய பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் உடுமலை வழியாக தென் மாவட்டங்களுக்குக் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல்- பாலக்காடு வழித்தடம், அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, 2015இல், பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர், மின் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டது.

தற்போது உடுமலை ரயில் நிலையம் வழியாக, கோவை - மதுரை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இம்மாதத்துடன், பள்ளி தேர்வுகள் முடிவடைய உள்ளன.

கோடை விடுமுறை துவங்கியவுடன், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில்களை அதிகளவில் பயன்படுத்துவர். ஆனால் தற்போது செல்லும் ரயில்கள் அவர்களுக்கு போதுமானதாக இல்லை.

எனவே, கோடைக் காலத்தில் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...