உடுமலை வழியாக கோவை - மதுரை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை ஆகிய பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர்: கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் உடுமலை வழியாக தென் மாவட்டங்களுக்குக் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல்- பாலக்காடு வழித்தடம், அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, 2015இல், பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர், மின் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டது.
தற்போது உடுமலை ரயில் நிலையம் வழியாக, கோவை - மதுரை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இம்மாதத்துடன், பள்ளி தேர்வுகள் முடிவடைய உள்ளன.
கோடை விடுமுறை துவங்கியவுடன், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில்களை அதிகளவில் பயன்படுத்துவர். ஆனால் தற்போது செல்லும் ரயில்கள் அவர்களுக்கு போதுமானதாக இல்லை.
எனவே, கோடைக் காலத்தில் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்டுக்கல்- பாலக்காடு வழித்தடம், அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, 2015இல், பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர், மின் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டது.
தற்போது உடுமலை ரயில் நிலையம் வழியாக, கோவை - மதுரை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இம்மாதத்துடன், பள்ளி தேர்வுகள் முடிவடைய உள்ளன.
கோடை விடுமுறை துவங்கியவுடன், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில்களை அதிகளவில் பயன்படுத்துவர். ஆனால் தற்போது செல்லும் ரயில்கள் அவர்களுக்கு போதுமானதாக இல்லை.
எனவே, கோடைக் காலத்தில் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.