திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பரத், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று நண்பருடன் பைக்கில் பெட்ரோல் போட சென்ற போது, பைக் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் பரத் உயிரிழந்தார்.
கோவை: ஒத்தகால்மண்டபம் அருகே பைக் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் அருகே உள்ள வேடச்சந்தூரை சேர்ந்தவர் செந்தில்குமார். பைனான்சியர். இவரது மகன் பரத் (21). இவர் கோவை மயிலேரிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று பரத்துடைய நண்பரான குமரேசன் என்பவரது பைக்கில் பெட்ரோல் இல்லை. எனவே பெட்ரோல் போட செல்வதற்காக பரத் தனது பைக் மூலம் குமரேசன் பைக்கின் உதவியோடு சென்று இருந்தார்.
ஒத்தகால்மண்டபம் - ஒக்கிலிபாளையம் ரோட்டில் சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த கம்பி வேலி, கல்லில் மோதி நின்றது. இதில் அவருக்கு தலையில் ஏற்பட்டு உயிருக்கு போராடினார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பரத்தை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பரத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.