உடுமலை அருகே உச்சிமாரியம்மன் கோவில் திருவிழா - பக்தர்கள் பங்கேற்பு!

உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் மிகவும் புகழ்பெற்ற உச்சிமாரியம்மன், மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 31ஆம் தேதி தொடங்கிய விழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.


திருப்பூர்: உடுமலை அருகே உச்சிமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் மிகவும் புகழ்பெற்ற உச்சிமாரியம்மன், மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று வருகிறது.

உச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28-ந்தேதி கம்பம் நடுதல் மற்றும் சக்தி பூஜை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.



கடந்த 31-ந் தேதி சோமவாரப்பட்டி விநாயகர் கோவிலிலிருந்து திருமூர்த்தி மலைக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.



சோமவாரப்பட்டி விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு வளர்த்துக் கொண்டு செல்லுதல் நிகழ்ச்சியும் இரவு பொதுமக்கள் பரிவட்டத்துடன் கோவிலுக்கு வருகை தந்து அம்மனுக்கு அலங்காரம் செய்து பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும், மாகாளியம்மனுக்கு சக்தி கும்பம் எடுத்தல் நிகழ்ச்சியும் காலை அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் வானவேடிக்கையும் நடைபெறுகிறது.

இரவு கம்பம் பிடுங்கி கங்கையில் விடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், அபிஷேகம், பூஜையும் நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டி, எஸ் அம்மாபட்டி, பொட்டிநாயக்கனூர், ரத்தினம்மாள் நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...