திருப்பூரில் குடிநீருடன் கலந்து வந்த கழிவுநீர் - போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு!

திருப்பூர் மாநகராட்சியில் 36 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் கழிவு கலந்து வந்ததாக அளித்த புகாரின் பேரில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில், அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்தததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு மிலிட்டரி காலனி, சூசையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.



இப்பகுதியில் நேற்றைய தினம் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் கழிவு நீரும் கலந்து வந்துள்ளது. அதேபோல் குடிநீர் ஆனது மிகவும் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இருந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மேயரிடம் பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதாகவும் நேற்று வந்த குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.



இதையடுத்து மாநகராட்சி மேயர் 4வது குடிநீர் திட்டத்தில் போடப்பட்டுள்ள குழாய்கள் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டதால் பழுதடைந்து உள்ளதாகவும் இனி இது போன்ற தவறு நடக்காது விரைவில் பிரச்சனை சரி செய்து தரப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...