கோவைக்கு வந்த புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

பெங்களூரில் இருந்து கோவை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட 5000 புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: கோவைக்கு கொண்டு வரப்பட்ட 5000 புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டிற்கு என்று 7,579 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4436 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1310 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.



மேலும் தற்போது, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பெங்களூர் பெல் நிறுவனத்திலிருந்து வரப்பெற்ற 5000 புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள், தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்படுகிறது.



இந்த வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்பாடி இன்று நேரில் பார்வையிட்டார்.



இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பொ) குணசேகரன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) விஜயலெட்சுமி, மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...