சேலம் ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பு தூய்மைப் பணிகள்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்திய ரயில்வேயினால் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புறவுப் பணிகளின் ஒரு பகுதியாக இன்று (23.02.2017) சேலம் ரயில்நிலையத்தில் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



நிரங்காரி பாபா ஹர்தேவ் சிங் அவர்களின் 63-வது பிறந்த நாள் நினைவை ஒட்டி நடைபெற்ற இந்த சிறப்பு தூய்மைப் பணிகளில், சந்த் நிரங்காரி அறக்கட்டளையின் 45 தன்னார்வத் தொண்டர்கள் ரயில்வே ஊழியர்களுடன் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். 



சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் எம். ஷாஜஹான் மற்றும் உதவி சுகாதார அலுவலர் எஸ்.குமார் ஆகியோர் இந்நிகழ்விற்கு தலைமை வகித்தனர். 



இந்திய ரயில்வேயில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளில் சந்த் நிரங்காரி அறக்கட்டளையின் பங்களிப்பை பாராட்டிய சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா, சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இத்தகு சிறப்பு தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...