உடுமலையில் தலைகொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேகம் - பக்தர்கள் தரிசனம்

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் புகழ்பெற்ற தலை கொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர். டிஎஸ்பி தேன்மொழிவேல் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


திருப்பூர்: உடுமலையில் புகழ்பெற்ற பழமையான அருள்மிகு சொர்ண காமாட்சி அம்மன் என்கின்ற ஸ்ரீ தலை கொண்ட அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

சிவ ஸ்ரீ குமணன் குருக்கள் தலைமையிலும் யாகசாலை பூஜைகள் மணிகண்டன் ,லதனீஸ்வரசிவம், ஹரிஹரன் சுவாமிநாத சிவம் குருக்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக காலை 7 மணிக்கு மங்கள இசை, நான்காம் காலவேள்வி ஆரம்பம் , வேதிகார்ச்சனை , கோபூஜை ஆலயவிக்ரகங்களுக்கு காப்பு காட்டுதல் நடைபெற்றது.



பின்னர் புண்ணிய தலங்களான ராமேஸ்வரம் கொடுமுடி பேரூர் திருமூர்த்தி மலை பழனி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோபுர கலசம் மேல் ஊற்றபட்ட பின் அருள்மிகு சொர்ண காமாட்சி அம்மன் என்கின்ற ஸ்ரீ தலை கொண்ட அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.



பின்னர் அலங்கார பூஜை தச தரிசனம் மற்றும் கோவிலில் நடைபெற்றது கும்பாபிஷேக பெருவிழா முன்னிட்டு சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

உடுமலை காவல்துறை கண்காணிப்பாளர் டிஎஸ்பி தேன்மொழிவேல் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...