உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா - பக்தர்கள் வழிபாடு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கம்பம் போடுதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் கம்பம் போடுதல் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.



உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. வருகின்ற 13ஆம் தேதி தேர்திருவிழா நடைபெற உள்ள நிலையில் இன்று பேருந்து நிலையம் அருகில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் உள்ள கிணற்று நிரில் இரண்டு நாள் ஊறவைத்த அரச மரத்தாலான மூன்று கிளைகள் கொண்ட கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.



மேலும் பக்தி முழக்கங்கள முழுங்க கும்பங்கள் அணிவகுத்து செல்ல மேளதாளத்துடன் பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலாக எடுத்துச் செல்லப்பட்டு நடப்பட்டது . பின்னர் கோவிலை மூன்று முறை பூவோடு எடுத்து சுற்றிவந்து பூஜைகள் நடத்தப்பட்டன.



பூஜைகளுக்கு பின் திருக்கம்பத்துக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்கள் திருக்கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...