திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கம்பம் போடுதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.
திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் கம்பம் போடுதல் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. வருகின்ற 13ஆம் தேதி தேர்திருவிழா நடைபெற உள்ள நிலையில் இன்று பேருந்து நிலையம் அருகில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் உள்ள கிணற்று நிரில் இரண்டு நாள் ஊறவைத்த அரச மரத்தாலான மூன்று கிளைகள் கொண்ட கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

மேலும் பக்தி முழக்கங்கள முழுங்க கும்பங்கள் அணிவகுத்து செல்ல மேளதாளத்துடன் பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலாக எடுத்துச் செல்லப்பட்டு நடப்பட்டது . பின்னர் கோவிலை மூன்று முறை பூவோடு எடுத்து சுற்றிவந்து பூஜைகள் நடத்தப்பட்டன.

பூஜைகளுக்கு பின் திருக்கம்பத்துக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்கள் திருக்கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.
இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. வருகின்ற 13ஆம் தேதி தேர்திருவிழா நடைபெற உள்ள நிலையில் இன்று பேருந்து நிலையம் அருகில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் உள்ள கிணற்று நிரில் இரண்டு நாள் ஊறவைத்த அரச மரத்தாலான மூன்று கிளைகள் கொண்ட கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
மேலும் பக்தி முழக்கங்கள முழுங்க கும்பங்கள் அணிவகுத்து செல்ல மேளதாளத்துடன் பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலாக எடுத்துச் செல்லப்பட்டு நடப்பட்டது . பின்னர் கோவிலை மூன்று முறை பூவோடு எடுத்து சுற்றிவந்து பூஜைகள் நடத்தப்பட்டன.
பூஜைகளுக்கு பின் திருக்கம்பத்துக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்கள் திருக்கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.
இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.