கேரளாவின் பாலக்காடு அருகே நென்மரா மற்றும் வல்லங்கி ஆகிய 2 ஊர்கள் சார்பில் நடைபெற்ற வெடித்திருவிழாவில் பூமி அதிர, வானம் மிளிர பட்டாசுகள் பல வண்ணங்களில் வெடித்து சிதறியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.
கேரளா: பாலக்காட்டில் கோலாகலமாக நடைபெற்ற வெடித்திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு வெடித்திருவிழாவை கண்டு களித்தனர்.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெல்லியம்பதி மலை அடிவாரத்தில் நென்மரா மற்றும் வல்லங்கி என்ற 2 ஊர்கள் உள்ளன. இந்த 2 ஊர்களும் இரு தேசங்கள் என கேரள மக்களால் அழைக்கப்படுகிறது.
நென்மராவின் நெல்லிக்குளங்கர பகவதியின் முதன்மை தெய்வம் பிறந்ததை குறிக்கும் வகையில், வெடித்திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவானது, அழகாக அலங்கரிக்கப்பட்ட யானைகள், அன்ன பந்தல் மற்றும் அற்புதமான வானவேடிக்கைகளுக்கு பெயர் பெற்றதாகும்.
பசுமையான பகுதியாக காணப்படும் நென்மரா, வல்லங்கி இரண்டு ஊர்களிலும் அறுவடைக்கு பிறகு நட்பு போட்டியாக தொடங்குகிறது.

இந்த நட்புப் போட்டியின் போது இரு ஊர்கள் சார்பாக, ஊர்வலங்கள் மற்றும் சடங்குகள் ஒன்றையொன்று வின்னையே விஞ்சும் வகையில் நடத்துகின்றனர். "இரு ஊர்களும்" அந்தந்த ஊர்களில் ஒரே மாதிரியான சடங்குகளை செய்கிறார்கள்.
இந்த காலகட்டத்தில், கும்மாட்டி, கரிவேலை போன்ற பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்த்தியும் விழாவினை வியக்க வைக்கும் மூங்கில் மற்றும் மரத்தை பயன்படுத்தி "நென்மரா, வல்லங்கி" இரு ஊர் சார்பாக தனித்தனியாக ஒரு அன்ன பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பந்தல், பல்வேறு வண்ணங்களின் சிறிய பல்புகளால் மின்மயமாக்கப்பட்டுள்ளது.
இது இருப்பிடத்தின் அழகு மட்டுமல்ல, அலங்காரமும் உங்கள் இதயத்தையும் ஈர்க்கும் வண்ணம் போட்டி போட்டுக்கொண்டு அமைக்கின்றனர். இரண்டு ஊர்கள் சார்பாக யானைகளை அணிவகுப்பிற்காக அலங்கரித்து அழகுபடுத்துகின்றனர்.
இந்த ஊர்வலங்கள் முக்கிய இடமான நெல்லி குளங்கரா பகவதி கோயிலை நோக்கி நகர தொடங்குகின்றன. ஊர்வலம் நடந்துகொண்டிருக்கும் போது, சில பாரம்பரிய சடங்குகளுடன் "பஞ்சவாத்தியம்" மற்றும் "பாண்டி மேளம்" ஆகியவற்றை கேரளாவின் சிறந்த கலைஞர்கள் பலர் போட்டி போட்டு இசைக்கின்றனர்.
கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கேரளா, தமிழ்நாடு என இரு மாநிலங்களில் இருந்தும் "குட்டு" விழாவினை பார்க்க வருகிறார்கள். விழாவின் ஒரு பகுதியாக வான வேடிக்கை நடத்தப்படுகிறது.

நேற்று இந்த குட்டு விழாவில் நடைபெற்ற வானவேடிக்கைகள் பார்ப்பவர் கண்களை பிரமிக்க வைக்கும் வகையில், பூமி அதிர, வானம் மிளிர பட்டாசுகள் பல வண்ணங்களில் வெடித்து சிதறியது.
இது நென்மரா வல்லங்கி வேளா நாளில் இரவு வானத்தில் சூரியனை சில நிமிடம் நிறுத்திச்செல்கிறது. இரு ஊர் சார்பாக நடந்த இந்த வெடித்திருவிழா, வானவேடிக்கைகளை மிகவும் ஆடம்பரமாகவும் தனித்துவமாகவும் மாற்ற, புதிய மற்றும் வெவ்வேறு வழிகளைக் கண்டறிய முயற்சிகள் செய்து போட்டியில் மக்களை ஈர்த்து வருகின்றனர்.
இரு ஊர்களின் ஆரோக்கியமான போட்டிதான் இந்த வேடிக்கையான மற்றும் உற்சாகமான நிகழ்வின் உணர்வை உருவாக்கியது.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெல்லியம்பதி மலை அடிவாரத்தில் நென்மரா மற்றும் வல்லங்கி என்ற 2 ஊர்கள் உள்ளன. இந்த 2 ஊர்களும் இரு தேசங்கள் என கேரள மக்களால் அழைக்கப்படுகிறது.
நென்மராவின் நெல்லிக்குளங்கர பகவதியின் முதன்மை தெய்வம் பிறந்ததை குறிக்கும் வகையில், வெடித்திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவானது, அழகாக அலங்கரிக்கப்பட்ட யானைகள், அன்ன பந்தல் மற்றும் அற்புதமான வானவேடிக்கைகளுக்கு பெயர் பெற்றதாகும்.
பசுமையான பகுதியாக காணப்படும் நென்மரா, வல்லங்கி இரண்டு ஊர்களிலும் அறுவடைக்கு பிறகு நட்பு போட்டியாக தொடங்குகிறது.
இந்த நட்புப் போட்டியின் போது இரு ஊர்கள் சார்பாக, ஊர்வலங்கள் மற்றும் சடங்குகள் ஒன்றையொன்று வின்னையே விஞ்சும் வகையில் நடத்துகின்றனர். "இரு ஊர்களும்" அந்தந்த ஊர்களில் ஒரே மாதிரியான சடங்குகளை செய்கிறார்கள்.
இந்த காலகட்டத்தில், கும்மாட்டி, கரிவேலை போன்ற பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்த்தியும் விழாவினை வியக்க வைக்கும் மூங்கில் மற்றும் மரத்தை பயன்படுத்தி "நென்மரா, வல்லங்கி" இரு ஊர் சார்பாக தனித்தனியாக ஒரு அன்ன பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பந்தல், பல்வேறு வண்ணங்களின் சிறிய பல்புகளால் மின்மயமாக்கப்பட்டுள்ளது.
இது இருப்பிடத்தின் அழகு மட்டுமல்ல, அலங்காரமும் உங்கள் இதயத்தையும் ஈர்க்கும் வண்ணம் போட்டி போட்டுக்கொண்டு அமைக்கின்றனர். இரண்டு ஊர்கள் சார்பாக யானைகளை அணிவகுப்பிற்காக அலங்கரித்து அழகுபடுத்துகின்றனர்.
இந்த ஊர்வலங்கள் முக்கிய இடமான நெல்லி குளங்கரா பகவதி கோயிலை நோக்கி நகர தொடங்குகின்றன. ஊர்வலம் நடந்துகொண்டிருக்கும் போது, சில பாரம்பரிய சடங்குகளுடன் "பஞ்சவாத்தியம்" மற்றும் "பாண்டி மேளம்" ஆகியவற்றை கேரளாவின் சிறந்த கலைஞர்கள் பலர் போட்டி போட்டு இசைக்கின்றனர்.
கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கேரளா, தமிழ்நாடு என இரு மாநிலங்களில் இருந்தும் "குட்டு" விழாவினை பார்க்க வருகிறார்கள். விழாவின் ஒரு பகுதியாக வான வேடிக்கை நடத்தப்படுகிறது.
நேற்று இந்த குட்டு விழாவில் நடைபெற்ற வானவேடிக்கைகள் பார்ப்பவர் கண்களை பிரமிக்க வைக்கும் வகையில், பூமி அதிர, வானம் மிளிர பட்டாசுகள் பல வண்ணங்களில் வெடித்து சிதறியது.
இது நென்மரா வல்லங்கி வேளா நாளில் இரவு வானத்தில் சூரியனை சில நிமிடம் நிறுத்திச்செல்கிறது. இரு ஊர் சார்பாக நடந்த இந்த வெடித்திருவிழா, வானவேடிக்கைகளை மிகவும் ஆடம்பரமாகவும் தனித்துவமாகவும் மாற்ற, புதிய மற்றும் வெவ்வேறு வழிகளைக் கண்டறிய முயற்சிகள் செய்து போட்டியில் மக்களை ஈர்த்து வருகின்றனர்.
இரு ஊர்களின் ஆரோக்கியமான போட்டிதான் இந்த வேடிக்கையான மற்றும் உற்சாகமான நிகழ்வின் உணர்வை உருவாக்கியது.