தாராபுரம் அருகே ஓலைக்குடிசையில் மதுகுடிப்பகம் - தீவிபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தச்சன்புதூரில் எளிதில் தீப்பற்றக்கூடிய தென்னங்கீற்றில் குடில் அமைத்த குடிசையில் மதுகுடிப்பகம் செயல்படுகிறது. எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கும் முன்னரே டாஸ்மாக் மண்டல மேலாளர் மற்றும் போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் வட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில், தச்சன்புதுரில் டாஸ்மாக் பார் ஓலை குடிசையில் இயங்கி வருகிறது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டிவதைத்து வருகிறது.



இந்த நிலையில், எளிதில் தீப்பற்றக்கூடிய தென்னங்கீற்றில் குடில் அமைத்து மதுபார் செயல்படுவதால் அங்கு மதுப்பிரியர்கள் மது அருந்தும்போது, குடிபோதையில் சிகரெட், பீடி பிடித்துவிட்டு, அதை அணைக்காமல் அப்படியே கீழே போட்டு செல்கின்றனர்.



இது காற்றில் பறந்து கூரையின் மீது விழுந்தால் எந்த நேரமும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்தப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கும் முன்னரே டாஸ்மாக் மண்டல மேலாளர் மற்றும் போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுவிலக்கு அமலாக்கத்துறை அலுவலகம் அருகிலேயே ஓலைக்குடிசையில் மதுகுடிப்பகம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...