உடுமலை ரயில் நிலையத்தில் கூடுதல் பார்க்கி்ங் கட்டணம் வசூல் - பயணிகள் புகார்

உடுமலை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை ரயில் நிலையத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையத்தை தினசரி ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பயணிகள் வாகனங்களை பாதையை மறித்து நிறுத்துவதால், செல்வதற்கு இடமில்லாமல் பயணிகள் தவித்து வந்தனர்.

இந்நிலையில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையை ஏற்று உடுமலை ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடம் திறக்கப்பட்டது. ஆனால் அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படாமல், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பயணிகள் கூறியதாவது, ரயில் நிலையத்தில் பைக்குகளை நிறுத்துவதற்கு கட்டணமாக 12 மணி நேரத்துக்கு ரூ.15-ம், 24 மணி நேரத்துக்கு ரூ.20-ம் வசூலிக்கின்றனர். ஆனால் சில மணி நேரங்கள் மட்டுமே நிறுத்தி விட்டு சென்றாலும் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது குறித்து கேட்டால் முறையாகப் பதில் அளிப்பதில்லை. எனவே கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...