உடுமலை அரசுப்பள்ளியில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் - பாழாகும் அவலம்!

உடுமலை அரசு மேல்நிலை பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகிய நிலையில், 6 மாதமாக சீரமைக்கப்படாமல் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அரசு மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சீரமைக்கப்படாமல் பாழாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ராஜேந்திரா சாலை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு சுகாதாரமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் நவீன சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவ திட்டமிடப்பட்டது. இதற்கென சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021-22 மூலம் ரூ.5 லட்சம் செலவில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது.

இந்த இயந்திரம் நிறுவப்பட்டு ஒரு சில மாதங்கள் கூட செயல்படாத நிலையில் திடீரென பழுதடைந்தது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த இயந்திரமானது, செயல்படாத நிலையில் சுத்திகரிப்பு இயந்திரம் வீணாகி வருகிறது.

இதனால், மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...