பல்லடத்தில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நிறுத்தம்! - பரபரப்பு

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்துவது குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து இளம் வழக்கறிஞர்கள் வெளிநடப்பு செய்ததால் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற இருந்த சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது.


திருப்பூர்: பல்லடத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் தேர்தல் நடத்துவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் 2021 ஆம் ஆண்டு வரை உறுப்பினர்களாக உள்ள 84 வழக்கறிஞர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் எனவும் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை புதிதாக சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் வாக்களிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இதன் காரணமாக, மூத்த வழக்கறிஞர் மகேஷ் என்பவர் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பல்லடம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மார்ச் 31 2023 ஆம் ஆண்டு வரை உறுப்பினர்களாக சேர்ந்த இளம் வழக்கறிஞர்களையும் சேர்த்து தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு கோரப்பட்டது.



பெருவாரியான வழக்கறிஞர்கள் இதற்கு ஆதரவளித்த நிலையில் சில வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



ஆலோசனைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் வழக்கறிஞர்கள் சிலர் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், கடந்த ஒன்றரை வருடங்களாக சங்கத்தில் பைலாவை யாரும் பின்பற்றவில்லை. இளம் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பளிக்காததால் பெரும் ஏமாற்றத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் எந்த முடிவுகளும் எட்டப்படாமல் கூட்டம் முடிவடைந்தது. மேலும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற இருந்த வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...