தொழிலுக்கு இடையூறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை.! - போசியா அமைப்பு வலியுறுத்தல்

முறையான ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் வடமாநிலங்களிலிருந்து பொருட்களை கோவைக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது. அதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் முறையாக தொழில் செய்பவர்களுக்கு அதிகாரிகள் நெருக்கடி தருவது ஏற்புடையதல்ல என்று போசியா அமைப்பு கண்டித்துள்ளது.


கோவை: நவ இந்தியா பகுதியில் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘போசியா’ நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

கோவை நவ இந்தியா பகுதியில் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘போசியா’ நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.



இதில் ‘போசியா’ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், சிவசண்முககுமார், சுருளிவேல் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

இக்கூட்டத்தில், ஜிஎஸ்டி மூலம் ஏற்படும் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து தொழில்துறையினர் சார்பில், மத்திய அரசிடம் எடுத்துக் கூறியும், எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் குறு, சிறு தொழில்கள் முடங்கி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு அதிகாரிகள் மாநில ஜிஎஸ்டி செலுத்துவது தொடர்பாக குறு, சிறு தொழில்முனைவோர் மத்தியில் உள்ள சிறு குறைகளை கண்டறிவதும் அதற்காக பல லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் தொடங்கியுள்ளனர்.



இந்நடவடிக்கை தொழில்முனைவோர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறையாக தொழில் செய்து வரும் நிலையில், அவற்றை முடக்கும் வகையில் அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

முறையான ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் வடமாநிலங்களிலிருந்து ஏராளமான பொருட்கள் கோவைக்கு கொண்டு வரப்பட்டு வணிகம் மேற்கொள்ளப்படுகிறது. அவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் முறையாக தொழில்முனைவோருக்கு நெருக்கடி தருவது ஏற்புடையதல்ல.

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் துறை சார்ந்த உயரதிகாரிகளைச் சந்தித்து மனு அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...