மேட்டுப்பாளையம் அருகே 13 வயது சிறுமியை கடத்திய வாலிபர் கைது

மேட்டுப்பாளையத்தில் ஆசை வார்த்தை கூறி 13வயது சிறுமியை சென்னைக்கு கடத்தி சென்ற கேரளாவைச் சேர்ந்த பீரவின் என்பவரை, சிறுமியின் உறவினர்கள் பிடித்து தாக்கினர். இதையறிந்த போலீசார் வாலிபரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் 13வயது சிறுமியை கடத்திய கேரள வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தியை சேர்ந்தவர் பிரவீன் (28). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள புகை பரிசோதனை நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக வேலை பார்த்து வந்தார். அப்போது பிரவீனுக்கு அருகே ஜூஸ் கடை வைத்து நடத்தி வரும் உரிமையாளரின் மகளான 13 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் இது காதலாக மாறியது.நேற்று மாணவியை பிரவீன், சென்னைக்கு செல்லலாம் என ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளார். இதையறிந்த மாணவியின் உறவினர்கள் ஆட்டோவை பின் தொடர்ந்து சென்று, மதினா நகர் அருகே ஆட்டோவை நிறுத்தி மாணவியை மீட்டனர்.

பின்னர் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரவீனை மீட்டனர். பின்னர் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...