அனுப்பட்டி இரும்பு உருக்கு ஆலை குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்..! - பல்லடம் எம்.எல்.ஏ தகவல்!

பல்லடம் அருகே அனுப்பட்டியில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலைக்கு எதிராக 18வது நாளாக தொடரும் கிராம மக்களின் போராட்டம் குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று பல்லடம் எம்எல்ஏ எம்.எஸ்.எம். ஆனந்தன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: அனுப்பட்டி இரும்பு உருக்காலை விவகாரம் குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என பல்லடம் எம்எல்ஏ எம்.எஸ்.எம். ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்காலைக்கு எதிராக அப்பகுதி கிராம மக்கள் 18 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரும்பு உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், கால்நடை வளர்ப்பு, விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், பொது மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.



இதன் காரணமாக ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆலையை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.



இந்நிலையில் இன்று 18 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுக்கு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் எம் ஆனந்தன் நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பட்டி கிராம மக்கள் இந்த ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் இரும்பு உருக்கு ஆலையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளேன். நடப்பு சட்டப்பேரவையில் ஆலையால் ஏற்படும் பிரச்சனை குறித்தும், கிராம மக்களின் போராட்டம் குறித்தும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தீர்மானத்தை கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...