கோவையில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது - 4 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை சூலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நீலாம்பூர் பகுதியில் வீட்டில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த கணேசன் மற்றும் சுப்ரமணியன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: நீலாம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தனிப்படை அமைக்கப்பட்டு ஆங்காங்கே தீவிர கண்காணிப்பு பணிகளிலும் கோலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சூலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நீலாம்பூர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் நீலாம்பூர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை செய்தனர்.



அப்போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த கணேசன் (36) மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் (40) ஆகிய இருவரை பிடித்து விசாரித்தபோது, ஆட்டோ மற்றும் பைக் மூலம் கஞ்சாவை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ரூ.18,200 ரொக்கம், ஆட்டோ, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...