பொள்ளாச்சியில் ரமலான் நோன்பு திறப்பு - ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நல்விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து மக்களுக்கும் பசியை போக்க வேண்டும் என்பதுதான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியின் நோக்கம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



கோவை: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் ரமலான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். ஏழை எளிய மக்களின் சுக துக்கங்களில் பங்கு பெற்று அவர்கள் பசியை போக்கி இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்பது ரம்ஜான் பண்டிகையின் நோக்கம்.

இந்நிலையில் பொள்ளாச்சி நல்விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



நல் விடியல் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் முத்துபாய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, கிராத் ஓதி சாகுல் அமீது உவைஸ் துவக்கி வைத்தார்.



இந்த நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.



ஏழை எளிய மக்கள் பசியுடன் இருக்கும்போது என்ன நிலையை அடைவார்களோ? அந்த நிலையை உணர வேண்டும் என்பதற்காக ரமலான் விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து மக்களுக்கும் பசியை போக்க வேண்டும் என்பதுதான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியின் நோக்கம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...