உப்பாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்த அமைச்சர்கள்!

தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று முதல் 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், இன்று அமைச்சர்கள் மு.பே.சாமிநாதன் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். இதன்மூலம் 6060 ஏக்கர் பாசன வசதி பெறும்.


திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணையில் பாசனதிற்க்காக அமைச்சர்கள் தண்ணீர் திறந்து வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்பாறு அணையின் வலது மற்றும் இடது கால்வாய்கள் மூலம் பாசனத்திற்காக இன்று முதல் 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.



இதைத்தொடர்ந்து இன்று அமைச்சர்கள் மு.பே.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உப்பாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். இதன் மூலம் 6 ஆயிரத்து 60 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.



இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், திருப்பூர் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் பத்மநாபன், குண்டடம் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், தாராபுரம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், உப்பாறு அணை பாசன விவசாயச் சங்க தலைவர் கொங்கு ராசு, உப்பாறு அணை செயற்பொறியாளர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...