கொளுத்தும் கோடை வெயில் - கோவை குற்றால அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

. கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் பலரும் சுற்றுலா தலங்கள் மற்றும் நீர்வீச்சிகளுக்கு படையெடுத்து வரும் நிலையில், கோவை குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.


கோவை: கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் கோவை மட்டுமல்லாது வெளி மாவட்டங்களிலிருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



தமிழகத்தில் கோடைக்காலம் 2 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி விட்ட நிலையில் மாநிலம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலிலிருந்து தப்பித்து கொள்ளவும், குளுமையை அனுபவிக்கவும், சுற்றுலாத்தலங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு அதிகளவில் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.



குறிப்பாக கோவையிலுள்ள சுற்றுலா தளமான கோவை குற்றால அருவிக்கு கோவை மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள் இருந்தும் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் குற்றால அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.



மேலும் அருவியில் குளிக்கும் பயணிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி 20க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...